சென்செக்ஸ் புள்ளிகள் 1,546 புள்ளிகள் வீழ்ச்சி

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் 1,546 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

பணவீக்கம் அதிகரிப்பு குறித்த கவலை, வளர்ச்சி இல்லாதது மற்றும் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளினர். இதனால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 514 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 3,069 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 123 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.260.49 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.9.36 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,545.67 புள்ளிகள் குறைந்து 57,491.51 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 468.05 புள்ளிகள் சரிவு கண்டு 17,149.10 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment