தினம் ஒரு போட்டியாளர்.. விருந்து படைக்கும் பிக்பாஸ் அல்டிமேட்

by Column Editor

ஓடிடியில் ஒனிப்பரப்பாகவிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டில் தினம் ஒரு போட்டியாளர் அறிவிக்கப்படவிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்கள் வெற்றிப்பெற்றதை அடுத்து தற்போது 5வது சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீசனில் மக்கள் மனதை வென்ற ராஜூ, வின்னராக தேர்தெடுக்கப்பட்டார். அறிமுகமில்லாத போட்டியாளர்கள் கலந்துக்கொண்டாலும் நிச்சயம் இந்த சீசன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் வரும் ஜூன் மாதம் வரை காத்திருந்த நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஒடிடியில் புதிய நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ளது. இது வழக்கமான பிக்பாஸ் போன்று இல்லாமல் இந்தியில் ஒளிப்பரப்பாகும் 24 மணி நேர நேரடி ஒளிப்பரப்பாக இந்நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் என்ற தலைப்பில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற் உள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர் ஒவ்வொருவரையும் தினமும் ஒரு நபர் என்ற வீதம் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதோடு இன்றைய தினத்தின் முதல் போட்டியாளர் யார் என்ற க்ளூவோடு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கவிஞர் சினேகன் தான் முதல் போட்டியாளர் என்ற க்ளூ இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30-ஆம் தேதியிலிருந்து ஒளிப்பரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment