தொடர்ந்து 3வது நாளாக பங்குச் சந்தைகளுக்கு அடி.. சென்செக்ஸ் 634 புள்ளிகள் வீழ்ச்சி..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 634 புள்ளிகள் குறைந்தது.

பணவீக்கம் குறித்த கவலை மற்றும் அமெரிக்க பெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு போன்றவை இன்றும் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இறுதிவரை பங்கு வர்த்தகம் சரிவிலிருந்து மீளவில்லை. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில்,இன்போசிஸ் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,746 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,661 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 77 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.273.27 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.58 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 634.20 புள்ளிகள் குறைந்து 59,464.62 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 181.40 புள்ளிகள் சரிவு கண்டு 17,757.00 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment