கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது; புதிய தொற்றுகள் வரும் – எச்சரிக்கும் WHO

by Column Editor

கொரோனா தொற்று இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று உலக சுகாதார அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

ஜெனிவாவில் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொரோனா வைரஸ் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றும், ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஒமைக்ரான் வேண்டுமானால் தீவிரம் குறைந்ததாக இருக்கலாம். ஆனால் இது லேசான நோய் என்று சொல்லி தவறாக வழிநடத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கைக்கு காரணமாகிறது, உயிர் இழப்புகளையும் ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் இன்னும் தீவிரமாக பரவி வருகிறது . பலர் இன்னும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி பேசியுள்ளார். அவர் உலகம் இன்னும் கொரோனா தொற்றின் முதல் கட்டத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உண்மையில் மிகவும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒமைக்ரான் தொற்றின் அளவை பொறுத்தவரையிலும் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியில் ஒரு அர்த்தமுள்ள விளைவை ஏற்படுத்த முடியும் என்றும், ஒமைக்ரான் கொரோனாவுக்கான நேரடி தடுப்பூசியாக இருக்கப் போகிறதா என்றால், இது ஒரு திறந்த கேள்விதான். அதற்கு காரணம், புதிய உருமாற்றங்கள் வெளிவருகின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆண்டனி பாசியும் கூட, கொரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்பது இப்போது கணித்து கூறி விட முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

Related Posts

Leave a Comment