நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட இரண்டாம் பாகம் பற்றி வந்த தகவல்

by Column Editor

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடிக்க படு ஹிட்டாக ஓடிய திரைப்படம் புஷ்பா தி ரைஸ். தமிழ், ஹிந்தி மொழிகளிலும் படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது.

டிசம்பர் 17ம் தேதி வெளியாகிய இப்படம் ஹிந்தியில் மட்டுமே ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நடிகை ரஷ்மிகா ஒரு பேட்டியில் புஷ்பா தி ரூல் இரண்டாம் பாகம் குறித்து சில தகவல்கள் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இந்த வருட இறுதியில் டிசம்பர் மாதம் படம் ரிலீஸ் ஆகிவிடும் என்றிருக்கிறார்.

முதல் பாகத்தில் படு ஹிட்டடித்த நடிகை சமந்தா இடம்பெற்ற பாடல் போல் இரண்டாம் பாகத்திலும் அவரே ஸ்பெஷல் பாடலில் வருவாரா அல்லது வேறு நாயகி இடம்பெற செம குத்து பாடல் அமையுமா என்பது ரசிகர்களின் பெரிய கேள்வியாக இப்போது இருக்கிறது.

Related Posts

Leave a Comment