ஒரு போட்டியாளரா நான் ஜெயிக்கனும் – என் ஆசை இதுதான் என்கிறார் பிரியங்கா !

by Column Editor

இந்த 100 நாட்களில் என்னை பிடித்திருந்தால் எனக்கு வாக்களிங்க என பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதிப்போட்டியாளராக உள்ள 5 பேர் வின்னராக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோல்டன் மைக் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் அடுத்தடுத்து போட்டியாளர்கள் பேசி வருகின்றனர். இதில் பேசினால் மக்களிடம் நேரடியாக சென்றடையும் என்பதால் போட்டியாளர்களின் இறுதி கருத்தாக இது கேட்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினத்தின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பிரியங்கா பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. என்னை அடுத்தடுத்த லெவலுக்கு உயர்த்தி கொண்டு சென்றது என்னுடைய கெரியர் மட்டும்தான். மைக் பிடித்துக்கொண்டு நான் நிகழ்ச்சி தொகுப்பாளரான வந்தது எல்லாமே அது காரணம். என்னுடைய வேலையை மிகவும் நேசிக்கிறேன். இந்த இடத்திற்கு வருவதற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். உடனே இந்த இடம் எனக்கு கிடைத்து விடவில்லை என்றார்.

மேலும் பேசிய அவர், எல்லாவற்றையும் தாண்டி ஒரு போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால் இந்த 100 நாட்களில் பிரியங்காவை உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பிரியங்கா இந்த பேச்சு ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment