வின்னராவதற்கு இறுதி வாய்ப்பு.. புதிய டாஸ்க்கால் பதற்றத்தில் போட்டியாளர்கள் !

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசனில் டைட்டில் வின்னராக போட்டியாளர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 99வது நாளை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். ஏனெனில் இந்த நிறைவுபெற ஒரு வாரமே உள்ள நிலையில் 5 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு செல்கின்றனர். இந்நிலையில் இறுதிப்போட்டியில் வின்னராவதற்கு போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அது குறித்த இன்றைய தினத்தின் முதல் ப்ரோமோதான் வெளியாகியுள்ளது. அதில், ‘கோல்டன் மைக் கடிதம்’ என்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக யாரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதை குறித்த இறுதி முடிவை எடுக்கும் மிக முக்கியமான வாரம் இது என்பது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்த டாஸ்க்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் போட்டியாளர்கள் நேரடியாக மக்களிடம் பேச கடைசியாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி கன்பெக்ஷன் ரூமில் கோல்டன் மைக்கில் பேசும் ராஜூ மற்றும் பிரியங்காவின் காட்சிகள் காட்டப்படுகிறது. இதையடுத்து பேசும் பாவனி, என்னை பொறுத்தவரை இந்த விளையாட்டை உண்மையாக விளையாடி இருக்கிறேன் என்று நம்புகிறேன் என்கிறார். கடைசியாக பேசும் நிரூப், ஏதோ ஒரு இடத்தில் மக்களை ஏமாற்றிவிட்டேனோ என்று தோன்றுகிறது. அதனால் அனைவரும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment