களைகட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சி – ஆர்.ஜே-வாக மாறிய சிபி, அபினய்!

by Column Editor

ராஜு பிக்பாஸாக இருக்கும் போது பிரியங்காவை அப்படியே மெயின் கதவு வழியாக வெளியே செல்லுங்கள்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வைல்டு கார்டு என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் பங்கேற்றனர்.

இதில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் நடைபெற்று அதில் குறைந்த வாக்குகள் நபர் வெளியேறுவார். அதன்படி ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில், கடந்த வாரம் தாமரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெற்று அமீர் முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வான நிலையில், ராஜு, பிரியங்கா, பாவ்னி, நிரூப் அடுத்தடுத்து பைனலுக்கு சென்றனர்.

தற்போது இந்நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இறுதி வாரத்தில், யார் வெற்றியாளராக பிக் பாஸ் டைட்டிலை பெற போகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடைசி வாரம் என்பதால் ஜாலியான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில், போட்டியாளர்களை பிக் பாஸாக மாற வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

முதலில் பிரியங்கா பிக்பாஸாக மாறி எல்லோருக்கும் 2 மணி நேரம் தூங்க நேரம் கொடுப்பதாக வேடிக்கையாக அறிவித்தார். பின்னர் அமீர், பாவ்னியிடம் பேசாமல் இருக்க வேன்டும், ராஜு வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்றார்.

பின்னர் ராஜு பிக்பாஸாக இருக்கும் போது பிரியங்காவை அப்படியே மெயின் கதவு வழியாக வெளியே செல்லுங்கள் என காமெடியாக கூறினார். அமீர், ஒவ்வொருவரை வந்து பைனலுக்கு வந்திருக்கும் சக போட்டியாளர்கள் குறித்து பேச வேண்டும் என கூறினார். அதன்படி ஒவ்வொருவராக வந்து பேசினர்.

இதனை தொடர்ந்து “அன்பின் பரிசு” என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் வீட்டில் நீங்கள் விருப்பும் நபருக்கு ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அதன்படி பிரியங்கா ராஜுவிற்கு பரிசளித்தார். ராஜு – அமீருக்கும், அமீர் – ராஜுவிற்கும் கிப்ட் கொடுத்தனர். பாவ்னி – நிரூபிற்கும், நிரூப் – பிரியங்காவிற்கும் கிப்ட் கொடுத்தனர். தனது தங்க கைஜெயினை நிரூப், பிரியங்காவிற்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு எலிமினேட்டான போட்டியாளர்கள் மீட்டும் வருகை தரும் காட்சிகள் உள்ளது. அதில் நாடியா, ஸ்ருதி இன்று வரும் காட்சிகள் உள்ளது. தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், சிபி மற்றும் அபிநய் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர். எங்கு ஆரம்பித்தோமோ அங்கே திரும்பி வந்துள்ளோம் என கூறி கொண்டே வருகின்றனர். இவர்களுக்காக எப்எம் செட்அப் ஒன்றும் போடப்பட்டுள்ளது. “வணக்கம் மக்களே இது உலகம் எங்கும் பட்டி தொட்டியை கலக்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் எப்எம்” நமக்கு பிடித்த பாடல்களை கேட்கலாம் என சிபி பேசுகிறார். இதனை கேட்டு சக ஹவுஸ் மேட்ஸ் ஓடி வரும் காட்சிகள் உள்ளது. இதனால் இன்றையநிகழ்ச்சிகலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment