20,000 ஆப்கானியர்களை மீளமீள்குடியமர்த்தும் புதிய திட்டம் அறிவிப்பு!

by Column Editor

20,000 ஆப்கானியர்களை பிரித்தானியாவில் மீள்குடியேற உதவும் வகையில், புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வெளியேறிய 5,000க்கும் மேற்பட்டோர் முதல் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் கூறினார்.

இருப்பினும், மக்களை அழைத்துச் செல்வதற்கான பிரித்தானியாவின் திறன் வரம்பற்றது என்றும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் கடினமானது என்றும் அவர் எச்சரித்தார்.

திட்டத்தைத் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தொழிலாளர் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை, ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.

அந்த காலகட்டத்தில் மேற்கத்திய அரசாங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிந்த ஆப்கானிய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரித்தானியா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment