ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு!

by Column Editor

பிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27பேர் உயிரிழந்ததையடுத்து பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆங்கில கால்வாயில் இடம்பெற்ற விபத்தில், 17 ஆண்கள், ஏழு பெண்கள் – அவர்களில் ஒருவர் கர்ப்பமாக இருந்தார் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 27பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், மீண்டும் இதுபோன்ற விபத்து நிகழாமல் இருக்க, தாம் எடுக்க விரும்பும் ஐந்து படிகளை கோடிட்டுக் காட்டி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதில், பிரான்ஸ் கடற்கரையிலிருந்து அதிகமான படகுகள் வெளியேறுவதைத் தடுக்க கூட்டு ரோந்து, சென்சார்கள் மற்றும் ரேடார் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பரஸ்பர கடல் ரோந்துகள் ஒருவருக்கொருவர் பிராந்திய நீரில் மற்றும் வான்வழி கண்காணிப்பு, பிரான்ஸ் உடனான இருதரப்பு வருவாய் ஒப்பந்தத்தில் உடனடி வேலை, உள்ளடக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் பரிந்துரைகளை பிரான்ஸ் ஏற்றுக்கொள்வது கடினம் என அறியமுடிகின்றது.

உட்துறை செயலாளர் பிரிதி படேல், இந்த வார இறுதியில் தனது பிரான்ஸ் பிரதிநிதியை சந்தித்து எதிர்கால ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க உள்ளார்.

படேல் மற்றும் பிரான்ஸ் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கலேஸில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

Related Posts

Leave a Comment