பணத்தில் விளையாடும் அமீர் – கடுப்பாகும் சக போட்டியாளர்கள்

by Column Editor

ஒவ்வொரு ஹவுஸ்மேட்டிடமும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போவதாக அமீர் விளக்கியிருக்கிறார். ஆனால், இறுதியில் பிரான்க் செய்ததாகக் கூறியது அனைவரையும் கடுப்பாக்கியுள்ளது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 5 இல், தற்போது ராஜு ஜெயமோகன், பிரியங்கா, பாவனி, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் மற்றும் அமீர் ஆகிய 7 போட்டியாளர்கள் இறுதி கட்ட போட்டியை எதிர்கொண்டுள்ளனர். அடுத்த வாரம் சீசன் ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார், அதை விட, பணப்பெட்டியை எடுக்கப் போவது யார் என்று பரபரப்பாக இருக்கிறது.

இன்று காலையில் வெளியாகிய ப்ரோமோவில், பிக் பாஸ் பணத்தை 11 லட்சமாக உயர்த்ஹ்டி இருப்பதை தெரிவிக்கும் காட்சிகள் இருந்தன. இதையடுத்து இந்த பணத்தை எடுத்துக் கொண்டு தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறவிருப்பதாக தெரிவிக்கிறார் அமீர்.டிக்கெட் டூ ஃபினாலே ஜெயித்து விட்டதால், அடுத்த வாரம் நான் ஃபைனல்ஸ் நிகழ்ச்சிக்கு கட்டயாமகப் போவேன் என்று தெரியும் ஆனால், வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால் 11 லட்சம் எடுத்துக் கொண்டு வெளியேறப் போகிறேன் என்று முதல் புரோமோவில் அமீர் தெரிவிக்கிறார்.

அமீர் வெளியேறப் போவதாகக் கூறிய போது, அவரை கட்டியணைத்து வாழ்த்துகள் சொல்கிறார் சிபி. ஆனால், தற்போது வெளியான இரண்டாவது புரோமோவில் அமீர் வீட்டை விட்டுச் செல்லப் போவதாக பிரான்க் செய்தகாட்சிகள் உள்ளன.

நான் பிரான்க் பண்ணேன் என்று சிபியிடம் அமீர் கூறுகிறார். கடுப்பான சிபி, நீ பேசினது, சொன்ன விஷயம் எல்லாமே சரி தான் நீ நல்ல நடிகன், நடிக்கப் போகலாம் என்று பதிலடி கொடுத்தார். ஆனால், பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போவதாக அமீர் எல்லாரிடமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு ஹவுஸ்மேட்டிடமும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போவதாக அமீர் விளக்கியிருக்கிறார். ஆனால், இறுதியில் பிரான்க் செய்ததாகக் கூறியது அனைவரையும் கடுப்பாக்கியுள்ளது.

‘நீ பணப்பெட்டி எடுத்துட்டு போவேன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்’ என்று பாவனியும் அமீரிடம் கூறுகிறார். நான் பிரியங்கா அக்கா கிட்ட நேத்தே சொல்லிட்டேன் என்று அமீர் கூறும் காட்சிகள் உள்ளன.

Related Posts

Leave a Comment