இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி!?

by Column Editor

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி கடைசியாக மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது அவர் பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 28வது படமான இந்த படத்தின் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதமே வெளியானது. கொரானா காரணமாக படத்தை தொடங்க முடியவில்லை.

இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் இருவரும் பெண் முன்னணிக் கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் வடசென்னையை கலக்கிய கேங்ஸ்டர் ஒருவரின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறதாம். இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது. படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment