எனக்காக நீ இருக்கணும்… பாவனியிடம் எல்லைமீறி போகும் அமீர்; பணப்பெட்டியுடன் வெளியே செல்வது யார்?

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்திற்கு சென்றுள்ளது. இதனால், நேற்றைய நிகழ்ச்சியில் சரத்குமார், ரூ.3 லட்சம் பணம் இருக்கும் பெட்டியை கொண்டு வந்து வைத்தார்.

பின் போட்டியாளர்களிடம் ஜாலியாக பேசிய சரத்குமார், யாராவது ஒருவர் தான் வெற்றி பெற போகிறீர்கள். அதனால் அனைவரும் சிந்தித்து முடிவெடுங்கள் என அட்வைஸ் செய்து விட்டு போனார்.

இதனால் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற போவது யார் என கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், கார்டன் ஏரியாவில் பணப்பெட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருக்கும் அமீர் மற்றும் பாவனியும், பணப்பெட்டியை யார் எடுக்க போகிறார்கள் என்றே பேசுகிறார்கள்.

அப்போது அமீர், எனக்கு தெரிந்து யாரும் எடுக்க மாட்டார்கள். நானும் எடுக்க மாட்டேன். நீயும் எடுக்க மாட்டாய். நம்மை தவிர்த்து இங்குள்ள 5 பேரும் எடுக்க மாட்டார்கள் என கூறுகிறார்.

அதற்கு பாவனி, நான் எடுக்க மாட்டேன் என நீ எப்படி சொல்லலாம். நான் கூட பணத்தை எடுத்துக் கொண்டு போகலாம் என்கிறார். அமீரும் நீ போகக் கூடாது. எனக்காக நீ இருக்கனும் என்கிறார்.

இதனால் சிரித்தபடி, நான் என்ன உனக்காகவா இங்க வந்தேன் என கேட்கிறார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் எல்லை மீறி செல்லும் அமீரை தீட்டி தீர்க்கின்றனர்.

Related Posts

Leave a Comment