உள்ளே வந்தவுடன் கூட்டணி மாறிய விசித்திரா..

by Lifestyle Editor

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா, விஜய் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வர ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் இன்று காலை விசித்திரா, விஜய், நிக்ஸன் ஆகிய மூவரும் வருகை தந்துள்ளனர். வினுஷாவும் உள்ளே தான் இருக்கிறார் நிக்ஸன் வருகையால் ஏதாவது பிரச்சினை வருமா? என ஒரு பக்கம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் எவிக்ஷன் போட்டியாளர்கள் அனைவரும் மாயாவிற்கு அதிகமான ஆதரவு காட்டுகிறார்கள். இதனால் அர்ச்சனா, விஷ்ணு, மணி ஆகிய மூவரும் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் காட்சி வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து யார் டைட்டில் வின்னர் என்பதனை காண நெட்டிசன்கள் பலத்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment