திடீர் திருப்பம்… இறுதி வரை போராடிய இரு ஆண் போட்டியாளர்களும் அதிரடி வெளியேற்றம்!

by Column Editor

வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர் முதல் நபராக பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்துள்ளார்.

இதுவரை நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று கடைசி இரு போட்டியாளர்களாக சிபியும் அமீரும் மோதினார்கள்.

கொட்டும் மழையில் கடைசி வரை சிபி மற்றும் அமீர் போராடி வந்த நிலையில், சிபி கயிற்றை விட அமீர் ஃபினாலே டிக்கெட்டை வென்று விட்டார்.

ராஜு மற்றும் பிரியங்காவை போல ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆக இல்லாமல் இறுதி வரை போட்டிக்கு உண்மையாக இருந்த சிபி இந்த டாஸ்க்கில் 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மேல் தாக்குபிடித்தது பெருமைக்குரிய விஷயம் தான்.

ஆனால், கடைசியில் சிபிக்கு இந்த டிக்கெட் டு ஃபினாலே கிடைக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதை விட அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

கடைசி வரை போராடிய சிபி மற்றும் சஞ்சீவ் தான் இந்த வாரம் அதிரடியாக வெளியேற போகின்றார்கள்.

இது பார்வையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment