மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா.. கொந்தளிக்கும் ப்ரோமோ !

by Column Editor

‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு வில்லியாக நடித்து வந்த ஃப்ரீனா மீண்டும் சீரியலுக்கு வந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிப்பரப்பாகி வந்தது. இந்த சீரியலில் பாரதி கேரக்டரில் விஷ்ணு பிரசாத்தும், கண்ணம்மாவாக ரோஷ்னியும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷ்னி விலகியதால் புதிய கண்ணம்மாவாக விஜே வினுஷா நடித்து வருகிறார். அதேநேரம் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த வந்த வெண்பாவும் கர்ப்பமாக இருந்ததால் விலகினார். இதனால் சீரியல் சுவாரஸ்யமான இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வில்லி வெண்பா மீண்டும் சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் வெண்பா ஜெயிலில் இருந்து வெளியே வருவது போன்று காட்சிகள் காட்டப்பட்டுள்ளது. அப்போது வெண்பாவிடம் பேசும் வேலைக்காரி, இனிமேல் கண்ணம்மாவை நிம்மதியாகவே விடக்கூடாது. நீங்க இல்லாத இந்த ஒரு மாதத்தில் அவள் என்னமா ஆட்டம் போட்டாள் தெரியுமா என்று போட்டு கொடுக்கிறாள்.

இதனால் கோபமாகும் வெண்பா, இனி கண்ணம்மாவை டார்ச்சர் செய்யப்போகிறேன். இதுவரை நான் இருந்ததை விட இரண்டு மடங்கு இருக்கப்போகிறேன். அவளால்தான் நான் ஜெயிலுக்கு போனேன் என்று கடும் கொந்தளிப்புடம் பேசும் வசனங்கள் அந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. வெண்பா சீரியலுக்கு வந்துவிட்டதால் இனி அனல் பறக்கவிருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment