அடுத்த மாதம் மீண்டும் பிக்பாஸ்…

by Column Editor

ஜனவரியில் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி இந்நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக உள்ளது. ஏற்கனவே நான்குகள் வெற்றிக்கரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சி வரும் ஜனவரி முதல் வாரத்தில் நிறைவுபெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சீசன் முடிந்த கையோடு அடுத்த நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஓடிடித்தளத்திற்காக தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்று ஒடிடியில் மட்டும் இந்தியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. அதேபோன்று தற்போது தமிழில் தொடங்கவுள்ளதாம் விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் சீசன் 1 முதல் சீசன் 5 வரை கலந்து கொண்ட போட்டியாளர்களில் 13 பேர் வரை கலந்துக் கொள்ள உள்ளனர்களாம். அதேநேரம் இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறாரா என்ற தகவல் இல்லை. இதனால் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கவேண்டும்.

Related Posts

Leave a Comment