செம்பருத்தி சீரியலில் புதியதாக நடிக்க வந்த நடிகை- நாயகனுடன் அவர் எடுத்த புகைப்படம்

by Column Editor

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் TRPயில் முதல் இடத்தில் எல்லாம் வந்த தொடர் செம்பருத்தி.

பணக்கார வீட்டில் வேலைக்காரியாக பணிபுரியும் நாயகி அவரை காதலிக்கும் நாயகன். இவர்களின் காதல் போராட்ட கதையே இந்த செம்பருத்தி சீரியல் தொடர்.

தொடரில் இடையில் கதாநாயகன் மாற்றத்திற்கு பிறகு கதையில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் முடியப்போகிறது என்றெல்லாம் தகவல் வந்தது.

ஆனால் இப்போதைக்கு சீரியலை முடிக்கும் எண்ணம் இந்த தொடர் குழுவினருக்கு இல்லை என்பது தெரிகிறது.

இந்த நிலையில் சீரியலில் புதியதாக நடிகை நந்தினி நடிக்க வந்துள்ளார். அவர் நாயகன் அக்னியுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment