இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் 2022ல் தொடங்கப்படும்!!

by Column Editor

இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் 2022ல் தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விரைவில் தொடங்கப்படும் என மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, மும்பை ,கொல்கத்தா, பெங்களூரு, குருகிராம், சண்டிகர், டெல்லி ஜாம்நகர் ,அகமதாபாத், ஹைதராபாத், லக்னோ, புனே ,காந்தி நகர் ஆகிய பகுதிகளில் 5ஜி சேவை மையங்கள் தயார்நிலையில் உள்ளன. இந்த நகரங்களில் நாட்டிலேயே முதலாவதாக 5ஜி சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் 5ஜி இணைய சேவைகள் 2022இல் தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சென்னை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறை இந்த ஆண்டு நேரடி அன்னிய முதலீடு 150 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டு தொலைத் தொடர்புத் துறையால் சுமார் 224 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 5ஜி பரிசோதனை திட்டம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால், அது டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment