பின் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. நிரூப்பை எச்சரித்த கமல் !

by Column Editor

நீங்க பேசின பேச்சால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று நிரூப்பை கமல் எச்சரிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வழக்கம்போல் இந்த வாரமும் புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடினர். அதில் முக்கியமான டாஸ்க்காக இருந்தது ரோப் டாஸ்க். ஏனென்றால் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒரு கயிறு ஒன்றை பிடித்துக்கொண்டு இரவு முழுவதும் இருந்தனர். இதில் நடந்த சம்பவங்கள் குறித்து இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நிரூப் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரையும் கமல் விசாரிக்கிறார். அதில் பேசும் கமல், நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் ரோப் டாஸ்க்கில் கயிறை இரவு முழுவதும் வலிமையாக பிடித்துக்கொண்டிருந்தீர்கள். ஆனால் ஏன் விட்டீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இந்த டாஸ்க் விளையாடும்போது, நிரூப் எனக்கு வேண்டாம். அவன் நல்ல கேப்டனாக இருக்கமாட்டான் என்று டாஸ்க் விளையாடும்போது பக்கத்தில் இருந்துக்கொண்டே பிரியங்கா சொன்னாங்க. இதனால் எனக்கு பயங்கரமாக கோபம் வந்து கயிரை விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று கமலிடம் நிரூப் சொன்னார். நிரூப்பின் இந்த குற்றச்சாட்டை விசாரிக்கும் கமல், அது என்ன உங்களின் கேம் விளையாடும் யுக்தியா என்று பிரியங்காவிடம் கேட்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் பிரியங்கா, என் அருகில் அமர்ந்துக்கொண்டு, பெண்கள் இங்கே இருப்பதால்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நிரூப் திரும்ப திரும்ப சொன்னார். இருவரையும் மொத்தமாக விசாரித்துவிட்டு பேசும் கமல், செல்பிஷ், ஈவில் போன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தியுள்ளீர்கள். இதற்கு பின்விளைவு இருக்கும் என்று நிரூப்பை கமல் எச்சரிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment