அடித்துக் கொள்ளும் தாமரை மற்றும் அமீர் – கூலாக வேடிக்கை பார்க்கும் சக போட்டியாளர்கள்!

by Column Editor

கடந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே ரேசில் நடந்த பலூன் டாஸ்க்கில் ஏன் கூட்டு சேர்ந்து விளையாடினீர்கள், மற்ற போட்டியாளர்களின் பலூன்களை உடைக்கவில்லை என்று வார இறுதி எபிசோடுகளில் கமலஹாசன் முன்னிலையில் தாமரை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவ்னி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்து கொண்டனர். நேற்று சஞ்சீவ் வெளியேறிய நிலையில், தற்போது 7 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த சீசனின் இறுதி நாமினேஷன் வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது. திங்கட்கிழமை என்றாலே, நாமினேஷன் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அடுத்த வாரம் சீசனின் ஃபைனல்ஸ் என்பதாலும், இது தான் கடைசி நாமினேஷன் என்பதாலும், யாரெல்லாம் நாமினேட் ஆகிறார்கள் மற்றும் இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்று ஆட்டம் சூடு பிடித்துள்ளது.

போட்டியாளர்கள் யாரை நாமினேட் செய்கிறார்களோ அவர்கள் கழுத்தில் மாலை அணிவித்து நாமினேட் செய்வதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று பிக் பாஸ் இந்த வாரம் டைரக்ட் நாமினேஷனை அறிவித்திருந்தார்.டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் வெற்றி பெற்ற அமீரை இந்த வாரம் நாமினேஷன் செய்ய முடியாது.

வெளியான முதல் புரொமோவில் நிரூப்பை சிபி நாமினேட் செய்கிறார் ,அதேபோல ராஜுவை பாவனி நாமினேட் செய்கிறார். பிரியங்கா தாமரையை நாமினேட் செய்யும் போது அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில் கடந்த வாரம் நடந்த பலூன் டாஸ்கைப்பற்றி தாமரையும் அமீரும் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே ரேசில் நடந்த பலூன் டாஸ்க்கில் ஏன் கூட்டு சேர்ந்து விளையாடினீர்கள், மற்ற போட்டியாளர்களின் பலூன்களை உடைக்கவில்லை என்று வார இறுதி எபிசோடுகளில் கமலஹாசன் முன்னிலையில் தாமரை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

ராஜுவின் பலூனை ஏன் யாரும் உடைக்கவில்லை என்ற கேள்விக்கு மற்ற போட்டியாளர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. தற்போது வெளியான இரண்டாவது புரோமோவில் அந்த விவாதம் மீண்டும் தொடங்கியது. ஏன் கூட்டு சேர்த்து விளையாடினீர்கள் என்று தாமரை அமீரைப் பார்த்து கத்தினார்.

உன்னுடைய பேச்சை நியாயப்படுத்தாதே, என்று தாமரை கத்தியதற்கு, நான் டீம் பிளான் பண்ணி தான் வந்தேன் என்று அமீர் பதில் கூறியிருந்தார்.

நீ டீம் பிளான் பண்ணு, ஆனா நான் ராஜுவையும் உன்னையும் சேர்க்கவே இல்லையே என்று, ராஜுவுடைய பலூனை ஏன் உடைக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கேட்டது அமீரை கடுப்பாக்கியது. என்னை கேள்வி கேட்க உனக்கு உரிமையில்லை என்று இருவருமே மாற்றி மாற்றி கத்திக் கொள்ளும் காட்சிகள் இருந்தன. இன்றைய புரோமோ இங்கே.

Related Posts

Leave a Comment