இந்த வாரம் பிக்பாஸில் எலிமினேட் ஆகப்போவது இவர்தான்

by Column Editor

பிக்பாஸ் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில், குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் (BiggBoss 5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

பிக்பாஸ் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதன்படி இந்த வார எவிக்‌ஷனில் வருண், பிரியங்கா, அக்‌ஷரா, சிபி, பாவனி, நிரூப் ஆகிய ஆறு போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இதில் இன்றைய எபிசோடில் பிரியங்கா முதலாவதாக காப்பாற்றப்படுவதாகவும், அதன்பின்னர் சிபி மற்றும் பாவனி ஆகியோர் சேவ் ஆக உள்ளனர். மீதமிருக்கும் நிரூப், அக்‌ஷரா, வருண் ஆகிய மூவரில் குறைந்த வாக்குகளை பெற்றதன் காரணமாக அக்‌ஷரா இந்த வாரம் வெளியேற்றப்படுகிறாராம். இந்த வாரம் பாவனி எவிக்ட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்‌ஷரா எலிமினேட் செய்யப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment