முதலிடத்திற்காக அடித்துகொண்ட சிபி – நிரூப்! பிக்பாஸில் தொடங்கிய புது பிரச்சனை

by Column Editor

பிக் பாஸ் நிறைவடைய இன்னும் ஐந்து வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டியாளர்கள் இடையே வரும் நாட்களில் போட்டி மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் இருப்பதால் அதை குறைக்க நிச்சயம் ஒரு வாரம் டபுள் எலிமிநேஷன் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிக்க போட்டியாளர்களுக்கு சில டாஸ்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

அதில் போட்டியாளர்கள் தங்களுக்கு ரேங்க் கொடுத்துக்கொள்ள வேண்டும் என சொல்லப்பட்டு இருக்கிறது. ராஜு மூன்றாம் இடம், பிரியங்கா இரண்டாம் இடத்திலும் அமர்ந்து கொள்கின்றனர்.

அடுத்து முதலிடத்திற்கு தான் சண்டை நடந்திருக்கிறது. சிபி முதலிடத்தில் ஏறி நிற்க நிரூப் அவருடன் சண்டை போட்டிருக்கிறார். இருவருக்கும் நடுவில் இது தொடர்பாக பெரிய வாக்குவாதமே நடந்திருக்கிறது. ப்ரொமோ இதோ..

Related Posts

Leave a Comment