”10 ஆண்டுகளில் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்..” – ஸ்டாலின் உறுதி

by Column Editor

2031-க்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் CREDAI அமைப்பின் மாநில மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் வீடு, மனைகள் விற்பனை 17 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் வீடு,மனை பத்திரப்பதிவு மூலம் ரூ.5973 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக முன்னேறி வருவதை குறியீடுகள் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலாண்டில் தொழிற்சாலைகள் சேமிப்பு கிடங்குகள் 4.4 மில்லியன் சதுரஅடி பரப்புக்கு அமைக்கப்பட்டுள்ளன என்றும் , கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி 2 மடங்காக அதிகரித்திருப்பதாக கூறினார். கட்டுமானத்துறையில் பல புதிய முயற்சிகளை அரசு மேற்கொண்டு வரிகிறது என்றும், தமிழகத்தை 12 மணடலங்களாக பிரித்து மனைப்பிரிவு, மனைகளுக்கு 60 நாளில் அனுமதி அளிப்பதற்கான ஒற்றைச்சாரள முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

சென்னையின் வளர்ச்சிக்கான பெரும் திட்டம் ஒன்று 2026 முதல் 2046-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்த ஸ்டாலின், இதுவரை 5 ஆண்டுகளாக இருந்த வரைபட அனுமதியின் செல்லத்தக்க காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று கூறினார். மேலும் . 2031 ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.31,000 கோடியில் 9.53 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment