எப்பப்பா… இவ்வளவு கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ஜடேஜா – சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் இவர்தானா?

by Column Editor

முதலில் தக்கவைக்கும் வீரர் என்ற அடிப்படையில் முதலில் ரவீந்திர ஜடேஜா தக்க வைக்கப்பட்டுள்ளார். இது, சிஎஸ்கே அணியில் தோனி ஓய்வுபெற்ற பிறகு அடுத்த கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்படுவார் என்பதற்கான அறிகுறியாகத்தான் உள்ளது.

ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்க உள்ளது. இதில், 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க நேற்று கடைசி நாள் என்பதால் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை வெளியிடப்பட்டது.

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகிய 4 வீரர்கள் தக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில், தோனியை விட அந்த அணியைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா அதிக விலைக்குத் தக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஜடேஜாவை 16 கோடி ரூபாய் கொடுத்தும், தோனியை 12 கோடி ரூபாய் கொடுத்தும், மொயீன் அலியை 8 கோடி ரூபாய் கொடுத்தும், ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி ரூபாய் கொடுத்தும் தக்க வைத்துள்ளது அணி நிர்வாகம். இந்த 4 வீரர்களைத் தக்க வைக்க ரூ.42 கோடி செலவிட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இது குறித்து ராபின் உத்தப்பா பேசுகையில், ”முதலில் தக்கவைக்கும் வீரர் என்ற அடிப்படையில் ரவிந்திர ஜடேஜா தான் முதலில் தக்க வைக்கப்பட்டிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வுப்பெற்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்படுவார் என்பதற்கான அறிகுறியாக இது உள்ளது. சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் மதிப்பு தோனிக்கு நிச்சயம் தெரியும்” என்றார்.

Related Posts

Leave a Comment