ரோட்டில் நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. மீனாவின் அப்பா இப்படி கூட செய்வாரா?

by Column Editor

மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

சீரியலில் இன்று ஜீவா செய்த காரியத்தால் மீனா அசிங்கப்பட்டு நிற்கிறார். ஒருவேளை இது பெரிய அண்ணன் மூர்த்திக்கு தெரிய வந்தால் கண்டிப்பாக பிரச்சனை வெடிக்கும்.

போன வாரம் முழுக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சோக ராகம் பாடிக் கொண்ருந்தது. ஒருவழியாக பல தடைகளை கடந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறக்கப்பட்டது. மூர்த்தி தனது தம்பிகளுடன் சேர்ந்து கடை திறப்பை நடத்தினார். ஒட்டு மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். மொத்த ஊரும் இவர்கள் குடும்பத்தை பற்றி தான் பெருமையாக பேச, மீனாவின் அப்பா வழக்கம் போல் பொறாமை கொள்கிறார்.

காரணம், எப்படியாவது ஜீவாவை வீட்டோட மாப்பிள்ளை ஆக்கிவிட வேண்டும் என துடித்தார். அதனால் தான் கடை விஷயத்தில் வேண்டுமென்ற உதவி செய்ய முடியாது என கைவிரித்தார். ஆனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் நேர்மையாக இருந்து கடையை திறந்து விட்டனர். இனிமேல் ஜீவா அவர் வீட்டுக்கு போக வாய்ப்பே இல்லை என்பதால் அவரால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது இப்படி இருக்க, கடை திறப்பு விழா முடிந்து அனைவரும் வீட்டுக்கு செல்கின்றனர்.

பின்புறத்தில் ஆட்டம், பாட்டம் என குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்க, தனத்தின் அண்ணா, மூர்த்தியிடம் ட்ரீட் கேட்கிறார். அவரின் ஆசைக்காக மூர்த்தியும் சம்மதம் சொல்ல, தனத்தின் அண்ணாவும், முல்லையின் அப்பாவும் சேர்ந்து குடிக்கின்றனர். அந்த இடத்தில் கூட நிற்க இருக்க கூடாது என்று மூர்த்தியையும், கதிரையும் அவர்களின் மனைவிகள் அழைத்து செல்கின்றனர். ஆனால் ஜீவானின் நிலைமை அப்படியே தலைக்கீழானது.

மீனாவின், சிங்கப்பூர் அண்ணா, ஜீவாவை குடிக்க வைக்கிறார். போதையில் ஜீவா தள்ளாடும் நிலைக்கு சென்று விட்டார். இது வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது. மாப்பிள்ளை அசிங்கப்பட கூடாது என்ற அக்கறையில் முதன்முறையாக மீனாவின் அப்பா ஒரு நல்ல காரியம் செய்கிறார். ஜீவாவை காரில் அழைத்து வந்து யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் விடுகிறார். ஆனால் மீனா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜீவா செய்த காரியத்தால் அசிங்கப்பட்டு நிற்கிறார். இதோடு இன்றைய எபிசோடும் முடிக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment