தாய்வான் எல்லையில் சீனா போர்ப் பயிற்சி! முப்படைகளும் பங்கேற்பு!

by Editor News

2ஆவது நாளாக தாய்வான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை உலகநாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தாய்வானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. சீனாவின் இந்த செயலுக்கு தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கையை சீனா கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சூழலில், தாவானின் பிரிவினைவாத நடவடிக்கைக்கு தண்டனையாக இந்த 2 நாள் போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 2 நாள் போர் ஒத்திகை பயிற்சியில் இராணுவம், கடற்படை, விமானப் படை, ஆகியவை பங்கேற்றுள்ளன.

Related Posts

Leave a Comment