ஒயின் ஷாப் சென்று உண்மையை கண்டுபிடித்த மீனா! கட்டிப்பிடித்து கதறிய முத்து!

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இளையமகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு மூத்த மகன் முத்துவை பிடிக்காமல் போயுள்ளது.

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.

முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

முத்து, அப்பாவிற்கு நல்ல பிள்ளையாக இருந்து வரும் நிலையில், தற்போது மீனாவின் தம்பி சத்யா, முத்துவின் தம்பி மனைவி சுருதியின் தந்தை செய்த சதியால் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார்.

ஒருபக்கம் காரை மீட்க போராடும் முத்து, மற்றொரு புறம் வீட்டில் தன்னை நிரூபிக்கவும் போராடுகின்றது. பின்பு மீனாவே ஒயின் ஷாப் செல்கின்றார்.

அங்கு வம்பிழுத்த ஒருவரை பளார் என அறைந்துவிட்டு, அங்கு சிசிடிவி-யை ஆராய்ந்து உண்மையை கண்டுபிடித்துள்ளார்.

பின்பு முத்துவிடம் சென்று அவர் மீது தவறு இல்லை என்பதையறிந்து அவரை கட்டிப்பிடித்து பாசத்தை வெளிக்காட்டியுள்ளார்.

Related Posts

Leave a Comment