மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் சதியால் அதிர்ச்சியான அபிராமி!

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா ஐடியா கொடுக்க ஆனந்த் மேனேஜரிடம் சொல்லி சதி செய்து கார்த்திக்கை தரையை துடைக்க விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அபிராமி கம்பெனிக்கு வந்திருக்க கார்த்திக் வேலை செய்வதை பார்த்து கண்கலங்கி நிற்க அந்த நேரம் பார்த்து கார்த்தி மெஷினுக்கும் கையை விட்டு காயம் ஏற்பட அபிராமி பதறி போய் ஓடி வந்து துடிதுடிக்க கார்த்திக் நீங்க எங்க இங்க, என்று கேட்க நீ வேலை செய்கிறது பார்க்க வந்தேன் என்று சொல்கிறார்.

உனக்கு இதெல்லாம் தேவையா வேண்டாம் வந்துடு என்று சொல்லி கார்த்திக்கை கூப்பிட கார்த்திக் இந்த குடும்பம் பிரியக்கூடாதுன்னு சொல்லிட்டுதானே நான் இந்த வேலைக்கு வந்தேன். வேலை செஞ்சா அடிப்பட தான் செய்யும் அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க வீட்டுக்கு போங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறான்.

வீட்டுக்கு வந்த அபிராமி அருணாச்சலத்துடன் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட அடுத்ததாக தீபா கார்த்திக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு வருகிறாள். சாதாரண புடவை கட்டிக்கொண்டு சிம்பிளாக வர செக்யூரிட்டி உள்ளே விட மறுப்பு தெரிவிக்கிறார்.

தீபா கார்த்தியோட மனைவி என்று சொல்ல கார்த்திக் சார் எங்களுடைய முதலாளி அவருடைய மனைவினு யாரை ஏமாற்ற பாக்கறீங்க? விட முடியாது என்று சொல்ல இந்த நேரம் பார்த்து அங்கு வரும் அருண் தீபாவை பார்த்து செக்யூரிட்டியை திட்டி விட்டு உள்ளே அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment