சத்தமில்லாமல் திடீர் திருமணம் செய்த சன் டிவி சீரியல் நடிகை!

by Column Editor

சாம்பவி தனது திருமண வீடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.

கொரானா தொற்றின் விளைவாக பாதியிலேயே நின்று போன ஒரு நாடகம் தான் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த கண்மணி சீரியல். இந்த தொடரில் “முத்து செல்வி” என்கிற கதாபாத்திரத்தின் கீழ் நடித்தவர் தான் சாம்பவி. கோவிட்-19 தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் விளைவாக கண்மணி சீரியலின் ஷூட்டிங்கில் சிக்கல் ஏற்பட்டது போல தெரிகிறது. எனவே இந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக, கண்மணி சீரியலின் நடிகை சாம்பவி, சன் டிவியில் இருந்து இடம்பெயர்ந்து தெலுங்கில் ஜெமினிடிவியில் ஒளிபரப்பாகும் ‘சாதனா’ என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜெமினியின் ஒளிபரப்பாகும் சாதனா என்கிற சீரியல் ஆனது, தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘கயல்’ தொடரின் தெலுங்கு வெர்ஷன் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அறியாதோர்களுக்கு கயல் என்பது சமீபத்தில் தொடங்கப்பட்ட சன் டிவியின் புதிய சீரியல் ஆகும். இதில் பிரபல ஜீ தமிழ் நாடகம் ஒன்றில் வில்லியாக கலக்கிய சைத்ரா ரெட்டி, கதாநாயகியாக நடிக்கிறார். உடன் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார்.

கயல் சீரியலில் சைத்ரா ரெட்டி ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் தான் சாதனா சீரியல் வழியாக சாம்பவி ஏற்று நடிக்கிறார். இந்த நிலைப்பாட்டில், சாம்பவிக்கு பிரசன்னா என்பவருடன் (அதாவது பிப்ரவரி 11, 2022 திருமணம் நடைபெற்றது. சின்னத்திரை ரசிகர்கள், இதை பெரிய அறிவிப்பு எதுவும் இல்லாத ஒரு திடீர் திருமணமாகவே பார்க்கிறார்கள்.

சாம்பவி தனது திருமண வீடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்களும், சக சின்னத்திரை நண்பர்களும் சாம்பவிக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதலே நிறைய சின்னத்திரை நடிகை, நடிகர்கள் தத்தம் திருமண வாழ்க்கைக்குள் புகுந்த வண்ணம் உள்ளனர். அதில் மிகவும் புதியவர் தான் – நடிகை சாம்பவி.

Related Posts

Leave a Comment