போட்டியில் வென்ற தனம்.. சர்பரைஸ் கொடுக்க முடிவெடுத்த ப்ரின்ஸிபல்; அதிர்ச்சியில் ஜானகி

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கம் சீனு பெயரில் எதுவும் இல்லை என்று குத்தி காட்டுவது போல் பேச மாயா அவருக்கு பதிலடி கொடுக்க லிங்கம் மன்னிப்பு கேட்டு வெளியேறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஜானகி மாயாவிடம் சீனு பல வருஷமா இங்க தான் இருக்கான், நான் கூட அவனை பற்றி இந்த அளவுக்கு தெரிந்து கொள்ளவில்லை, உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க மாயா நமக்கு பிடிச்சவங்களை பற்றி நம்மளை அறியாமலேயே நிறைய தெரிந்துப்போம் என்று சொல்ல ஜானகிக்கு சாமி சொன்ன விஷயம் நினைவுக்கு வந்து போகிறது.

சீனுவும் இவர்களை பேசுவதை பார்த்து மாயா இவ்வளவு நாளா நம்மளை பாலோ பண்ணி இவ்வளவு விஷயம் தெரிந்து வைத்திருக்காளே என்று சந்தோஷப்படுகிறான், மறுபக்கம் ஷாரு பார்வதி ஆகியோர் இந்த விஷயத்தை வைத்து பிரச்சனை செய்ய முடியாமல் போய்டுச்சே என்று பேச ஷாரு அந்த மாயாவுக்கு ஏற்கனவே சீனு மேல் ஒரு கண்ணு இருக்கு, அதனால் உஷாரா இருக்கனும் என்று சொல்கிறாள்.

இதனை தொடர்ந்து மாயா, தனம் ஆகியோர் காலேஜ் கிளம்ப ஜானகி தனத்தின் கையில் ஒரு கருப்பு கயிற்றை கட்டி நீ கண்டிப்பா பேட்மிட்டன் போட்டியில் ஜெயிக்கணும், சந்தியா ஒவ்வொரு முறையும் விளையாட போகும் போது இந்த மாதிரி கட்டி விடுவேன், அவளும் ஜெயித்து விட்டு தான் வருவாள் என்று சொல்லி அனுப்புகிறாள். காலேஜில் கார்த்திக் கீர்த்திக்கு ப்ராக்டிஸ் கொடுப்பதை பார்த்து தனம் கடுப்பாகிறாள்.

போட்டி தொடங்க முதல் போட்டியில் தனம் வெற்றி பெறுகிறாள், இவ்வளவு அழகா விளையாடுற தனத்திற்கு ஏதாவது செய்யணும் என்று யோசிக்கும் ப்ரின்ஸிபல் அவளது அப்பாவை வர வைத்து அவரது கையாலேயே பரிசு கொடுக்க வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார். உடனே ரகுராம் வீட்டிற்கு போன் செய்ய ஜானகி போனை எடுக்க ப்ரின்ஸிபல் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment