கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் விபத்தில் உயிரிழப்பு!

by Lifestyle Editor

கென்யாவின் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கென்யாவின் மேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் ஜெனரல் பிரான்சிஸ் ஓமண்டி ஓகொல்லா மற்றும் 11 பேர் பயணம் செய்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜெனரல் பிரான்சிஸ் கென்யாவின் மிக உயர்ந்த இராணுவ அதிகாரி என்றும் கென்யாவிற்கு இந்த நிகழ்வு மிகவும் சோகமான தருணம் எனவும் இந்த விபத்தில் இரண்டு பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என கென்யா ஜானாதிபதி வில்லியம் ரூட்டோ குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment