வெயிலில் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமா.. அம்மாக்கள் முக்கியமாக அறிய வேண்டியவை..!

by Lifestyle Editor

வெப்பமான காலகட்டம் கோடை காலம். இதில் குழந்தை நீரேற்றமாக இருக்க வேண்டுமே என்ற கவலை அம்மாக்களுக்கு வேண்டாம். ஏனெனில் குழந்தைக்கு வேண்டிய அனைத்து திரவங்களையும் தாய்ப்பால் ஈடு செய்துவிடும். ஆறு மாதம் கூட நிறைவடையாத குழந்தைக்கு கோடையில் தண்ணீரை கொடுப்பது எந்த கலோரிகளும் ஊட்டச்சத்துக்களும் இல்லாதது. தாய்ப்பாலே குழந்தையின் தாகம் தணிக்கிறது. மதிப்புமிக்க உயர் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகள் அளிக்கிறது. அதனாலேயே வெப்பமான காலங்களில் குழந்தை அடிக்கடி பால் குடிக்க விரும்புவார்கள். குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் அளிப்பதும் இதை தவிர வேறு எந்த திரவத்தை வழங்காமல் இருப்பதும் பால் விநியோகத்தை அதிகரிக்க செய்யும்.

தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாக்களுக்கு உண்டாகும் சங்கடங்கள் என்னென்ன?​

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மனச்சோர்வு, பதட்டம், தூக்க கோளாறுகள் போன்றவை இயல்பாக இருக்கும். தாய்ப்பால் கொடுக்கும் போது பலவீனமாக உணரலாம். தூக்கம் அல்லது தலைச்சுற்றல் உணரலாம். உடல் அதன் ஆற்றலில் 25% தாய்ப்பால் உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சோர்வை எதிர்கொள்ள பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

அதிக வெப்பம்,
மோசமான தூக்க முறைகள்
மோசமான உணவை பின்பற்றுவது
இரத்த சோகை
தைராய்டு பிரச்சனைகள்
முலையழற்சி அல்லது மார்பக நெரிசல்
உடற்பயிற்சி இல்லாமை
நீரிழப்பு போன்றவை தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு சோர்வை உண்டு செய்யலாம்.

​கோடைக்காலத்தில் தாய்ப்பால் சுரப்பு போதுமானதாக இருக்குமா?​

கோடைக்காலத்தில் தாய்ப்பால் சுரப்பு போதுமானதாக இருக்குமா என்னும் குழப்பம் அம்மாக்களுக்கு இருக்கும். ஆனால் தாய்ப்பால் சுரக்கும் முறை குழந்தைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது கோடையில் அதற்கேற்ப மாற்றியமைத்துகொள்ளும். வெப்பநிலை அதிகரிக்கும் போது மார்பகங்களுக்கு அதிக இரத்தம் பரவும். மார்பகத்தில் பாலூட்டி சுரப்பிகள் வியர்வை சுரப்பிகளை போலவே செயல்படுகின்றன. இந்த கூடுதல் இரத்தம் அதிக நீர் அடக்கம் கொண்டு அதிக பால் உற்பத்தி செய்கிறது. அதோடு குழந்தைக்கு தாகம் தணிக்க அடிக்கடி பால் கொடுக்க செய்ய்லாம். அதனால் வழக்கமான இடைவெளியில் பால் கொடுப்பதை காட்டிலும் தேவைக்கேற்ப உணவளிக்க செய்யுங்கள்.

தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்க போதுமான தண்ணீர் குடியுங்கள்​ :

நீரேற்றமாக இருப்பது தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு கூடுதல் முக்கியம். குழந்தை தாய்ப்பால் வழியாக அதிக தண்ணீரை எடுத்துகொள்ளலாம். அப்போது மற்றவர்களை விட அதிக தாகத்தை நீங்கள் உணரலாம். ஒவ்வொரு முறையும் குழந்தைக்கு உணவளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அதே போன்று தாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்கள் வழக்கத்தை விட தினமும் 1 லிட்டர் தண்ணீர் கூடுதலாக குடிக்க வேண்டும். நீர்ச்சத்து போதுமானதாக இல்லாத நிலையில் காஃபி குடிப்பது நீரிழப்பு உண்டு செய்யலாம்.

தண்ணீர் குடிப்பது சிரமமாக இருந்தால் பழத்துண்டுகள் கலந்த நீர் குடிக்கலாம். இது திரவ உட்கொள்ளலை அதிகரிக்க செய்யும். உடலை குளிர்விக்கவும் உதவும்.

இளந்தாய்மார்கள் கோடையில் சூரிய வெளிப்பாட்டை தவிர்க்க வேண்டும்​ :

குழந்தையுடன் வெளியே செல்ல வேண்டிய நிலை இருந்தால் தவிர்க்க வேண்டாம். ஆனால் மாலை 4 மணிக்கு மேல் வெளியே செல்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். குளிரூட்டமான இடங்களுக்கு செல்வது குழந்தைக்கு நன்மை செய்யும். குழந்தையின் ஆடைகள் அதிக கனமாக வைத்திருக்க வேண்டாம். இதனால் குழந்தை அசெளகரியத்தை உணர்ந்து தாய்ப்பால் குடிப்பதை தவிர்க்க செய்யலாம். மெல்லிய இலேசான ஆடைகள் அணிவது நல்லது. குழந்தைக்கு தொப்பி, சன் கிளாஸ் அணிவது நன்மை செய்யும். குழந்தைக்கு சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதாக இருந்தால் மருத்துவரின் அனுமதியுடன் பயன்படுத்துங்கள்.குழந்தைக்கு வெயில் அதிக எரிச்சலை உண்டு செய்யலாம் என்பதால் இயன்றவரை வெப்பத்தை வெளிப்படுத்தாத இடங்களில் வைத்திருங்கள்.

​குழந்தைக்கு கோடை பாதிப்பை அளித்திருப்பதை எப்படி கண்டறிவது?​

குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா? குழந்தை நீரிழப்பை சந்திக்கிறதா என்பதை அறிய குழந்தையின் நாப்கின் பரிசோதிக்கலாம். 24 மணி நேரத்தில் குறைந்தது ஐந்து ஈரமான நாப்கின்களேனும் இருக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் குடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக குழந்தை மலச்சிக்கல் கண்டறிய வேண்டும்.

குழந்தையின் நாப்கினில் அதிக ஈரம் இல்லாமல் இருப்பது, கருமை நிற சிறுநீர் அல்லது அடர்ந்த சிறுநீர், கடினமான மலம் போன்ற நீரிழப்பு அறிகுறிகள் இருந்தால் தாய்க்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இது இலேசான நீரிழப்பு நிலைகளை மாற்ற செய்யும். அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவதை தவிர்க்காதீர்கள்.

Related Posts

Leave a Comment