ஹெலிகொப்டர் நொருங்கி விழுந்ததில் இரு இராணுவ வீரர்கள் உடல் சிதறி பலி!

by Lifestyle Editor

பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே நொருங்கி விழுந்ததில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

காவிட் மாகாணத்தின் கடற்படை தளத்தில் வழக்கமாக நடைபெறும் இராணுவ பயிற்சியில் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, சாங்கி விமான நிலையத்திலிருந்து கடற்படை தளத்துக்கு ஹெலிகொப்டர் ஒன்று புறப்பட்டது.

ஆனால் புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த ஹெலிகொப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது, நிலைத்தடுமாறி கேவிட் சிட்டியில் உள்ள ஒரு சந்தைப்பகுதி அருகே ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகொப்டர் கீழே விழுவதை பார்த்த பொதுமக்கள் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்தில் 2 கடற்படை வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். இதனையடுத்து இராணுவ பயிற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment