பாண்டியம்மா எங்கே? வலைவீசி தேடிய செளந்தரபாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மாவை ஊரை விட்டு துரத்தி விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது பாக்கியமும் இசக்கியும் வீட்டிற்குள் நுழைய, சௌந்தரபாண்டி நின்று கொண்டிருப்பதை பார்த்து ஷாக்காகின்றனர். மாட்டிகிட்டோம் என்று எதிர்பார்க்க, தூக்கத்தில் நடக்கும் வியாதி காரணமாக இவர் அவர்களை கவனிக்காமல் நடந்து செல்கிறார்.

அடுத்ததாக மறுநாள் காலையில் பரணி கோலம் போட்டு கொண்டிருக்க, வெளியே வரும் ஷண்முகம் கோலத்தை பார்த்து என்ன வழக்கமாக நம்பர் போட்டுட்டு இருப்ப இன்னைக்கும் காணோம் என்று கேட்கிறான். பரணி அதுக்கு பதிலாக தான் ஒன்னு எழுதி இருக்கேன் அதை பாரு என்று சொல்கிறாள். இங்கிலிஷில் எழுதி இருக்க, அதை பார்த்த ஷண்முகம் என்னனு படிக்க தெரியல என்று சொன்னதும் பரணி ஐ லவ் யூ என்று எழுதி இருப்பதாக சொல்ல, ஷண்முகம் சின்ன பிள்ளைங்க இருக்க வீட்டில என்ன இதெல்லாம் என்று பரணியை திட்டுகிறான்.

சத்தம் கேட்டு தங்கைகள் எழுந்து வெளியே வர, ஷண்முகம் கோலத்தை மறைத்து நிற்க, தங்கைகள் சந்தேகப்பட்டு கோலத்தை பார்த்து விடுகின்றனர். ஐ லவ் யூ-னு தானே எழுதி இருக்காங்க, இதுல என்ன தப்பு இருக்கு? அது ஒன்னும் கெட்ட வார்த்தை இல்லை என்று சொல்லி ஷண்முகத்தை கூல் செய்கின்றனர். இங்கே சௌந்தரபாண்டி எழுந்து பார்க்க பாண்டியம்மா இல்லாததால் அவரை தேடுகிறார். அவருக்கு வந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆகிறார்.

அப்படியே மறுபக்கம் உடன்குடி ஓடி வந்து ஷண்முகத்திடம் அந்த மீனாட்சி குடும்பம் இங்க தான் லாட்ஜில் தங்கி இருக்காங்க என்ற விஷயத்தை சொல்ல, ஷண்முகம் அவர்களை பார்க்க கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment