முடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்!

by Lifestyle Editor

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு… சமீப காலமாக சீரியல்களை ஒரே மாதிரி இல்லாமல், வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக துவங்கி விட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களை தனித்துவமான கதைக்களத்துடன், ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படி பட்ட சீரியல்களுக்கும் இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை தொடர்ந்து தங்களின் ஆதரவை தந்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று ‘தமிழும் சரஸ்வதியும்’. டாப் 10 TRP லிஸ்டில் இந்த சீரியல் இடம் பிடிக்கவில்லை என்றாலும், அதிக அளவிலான ரசிகர்கள் இந்த தொடரை விரும்பி பார்க்கின்றனர்.

அம்மா – பிள்ளையின் பாசம், கணவன் – மனைவி காதல், நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதே இந்த சீரியலின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் தமிழ் என்கிற கதாபாத்திரத்தில் தீபக் நடிக்க, நக்ஷத்ரா சரஸ்வதி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலில் ராகினியின் கணவன் தங்களிடம் இருந்து ஏமாற்றி பிடிங்கி கொண்ட அனைத்தையும் மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

ராகினிக்கும் கணவன் பற்றிய உண்மை தெரிய வர உள்ளது. எனவே இனியும் இந்த சீரியலை இழுத்து கொண்டு செல்லாமல் சீரியலை முடிக்க முடிவு செய்துள்ளாரகள். இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த சீரியலின் கிளைமேஸ்க் காட்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment