சாரு எடுத்த சபதம்.. தனத்தை கண்டித்த ஜானகி

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாரு வீட்டுக்கு கிளம்பிய தன்னுடைய அப்பா அம்மாவிடம் கல்யாணத்துக்கு பிறகு ரகுராம் குடும்பத்தை சில்லு சில்லா உடைப்பேன், ரகுராமை உங்க கால்ல விழ வைப்பேன் என சபதம் எடுத்த நிலையில் இது நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சாரு சொல்வதை கேட்டு அவர்களது பெற்றோர் சந்தோஷமாக வீட்டுக்கு கிளம்பிச் செல்கின்றனர். அடுத்து தனம் என்னால அப்பாவுக்கு பெரிய அவமானம் ஏற்பட இருந்தது, ஒரு வழியா மாயா சமாளிச்சிட்டா என்று ஃபீல் செய்து கொண்டிருக்க, அங்கு வரும் சீனு மற்றும் மாயா இருவரும் போட்டியில் ஜெயித்த தனத்தை பாராட்டி கொண்டாடுகின்றனர்.

மாயா சீனுவை பற்றி யோசிக்க சீனு மாயாவை பார்க்க அவனுக்குள்ளான காதல் மேலும் அதிகமாகிறது. மறுபக்கம் ஜானகி ரகுராமிடம் தனது மனதில் இருக்கும் சந்தோஷத்தை சொல்லி பேசுகிறாள்.

மறுநாள் காலையில் ஜானகி பார்த்து மாயா நன்றி சொல்ல ஜானகி இது எல்லாத்துக்கும் காரணம் நீதான் என சொல்லும் போது,தனம் எனக்கு என்னுடைய அப்பா சப்போர்ட் பண்றது இல்ல என்று வருத்தப்பட்டு பேச ஜானகி அப்பாவை பற்றி அப்படி தப்பா நினைக்காத என்று எச்சரிக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய தொடர்ந்து சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment