ரோகினி பற்றி மனோஜுக்கு தெரிய வந்த உண்மை.!

by Lifestyle Editor

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. பணக்கார மருமகள்களை தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பேராசை கொண்ட மாமியாருக்கு, ஏழை வீட்டு மருமகளாக மீனா வருகிறார். இவரை தினமும், பல வேலைகள் செய்ய சொல்லி கொடுமை படுத்துகிறார் மாமியார் விஜயா.

அதே போல் விஜயாவின் இரண்டாவது மகன், நான் மிகப்பெரிய பணக்கார பெண் என ஏமாற்றும் ரோகிணியை திருமணம் செய்து கொள்கிறார். ரோகிணிக்காக விஜயா, தன்னுடைய சொத்து பத்திரத்தை அடமானம் வைத்து, பார்லர் ஒன்றை ஓப்பன் செய்து கொடுக்க, ஒரு கட்டத்தில் அந்த பார்லரை… வேறு ஒருவருக்கு சொந்தமாக்கி விட்டு அதில் வரும் பணத்தை கொண்டு, பார்லருக்காக விஜயாவிடம் வாங்கிய பணத்தை கொடுக்கிறார் ரோகிணி. இந்த பணம் தன்னுடைய துபாய் தந்தை அனுப்பியது என மீண்டும் பொய் சொல்கிறார்.

இப்படி பல பொய்கள் மற்றும் தெகிடு திட்டம் தீட்டி, இவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்க… எப்போது ரோகினி பற்றிய உண்மை தெரியவரும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் முத்துவுக்கு மட்டுமே தெரிந்த பார்லர் மேட்டர், மனோஜூக்கு தெரிய வருகிறது.

இந்த விஷயம் விஜயா காதுக்கு வர, அவரின் ஒரிஜினல் முகத்தை தற்போது ரோகிணிபார்க்கிறார். ‘ஏய் எதுவா வேணுனாலும் இருந்துட்டு போகட்டும், என்கிட்ட கேட்காம நீயா எப்படி முடிவு எடுப்ப. நான் பாத்திரத்தை வச்சு பணம் கொடுக்கலானா உன்னால சொந்தமா பார்லர் வச்சிருக்க முடியுமா? இந்த அசிங்கத்தை எனக்கு வாங்கி கொடுத்துட்டல்ல… இனிமே ஏதாவது விஷயத்தை மறைத்து நீ ஏதாவது செஞ்சன்னு தெரிஞ்சிது.. அப்ப இந்த விஜயா யாருனு நீ பார்ப்ப என கோவமாக கூறுகிறார்.

முதல் முறையாக விஜயாவின் இன்னொரு முகத்தை ரொம்ப குளோஸ் அப்பில் பார்த்த ரோகிணி பேரதிர்ச்சியில் உறைந்து நிற்க, தன்னுடைய மற்ற விஷயமெல்லாம் தெரிந்தால் என்ன ஆகுமோ என்று பதட்ட படுகிறார். எனினும் அடுத்தது ரோகிணி பற்றிய ஒவ்வொரு உண்மைகளாக வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment