பழியை ஏற்று ஜெயிலுக்கு செல்லும் சண்முகம்; பழிவாங்க முத்துப்பாண்டி போடும் மாஸ்டர் பிளான்

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி கனியை கைது செய்து கூட்டி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது கனியை முத்துப்பாண்டி ஸ்டேஷனுக்கு கூட்டி வர அதை பார்த்த முப்பிடாதே ஸ்கூல் பொண்ணு எதுக்குயா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்க ஹோம் வொர்க் கொடுக்க தான் என்று நக்கலாக பேசுகிறான்.

அதைத் தொடர்ந்து முப்பிடாதே வேணாமய்யா ஸ்கூல் படிக்கிற பொண்ணு விட்டுடுங்க என்று கெஞ்ச அவன் என்ன மிளகாய் பொடி தூவி அடிச்சது உங்க அண்ணன் தான் துப்பாக்கி தூக்கினது உங்க அண்ணன் தானே ஒத்துக்க உன்னை விட்டு விடுவேன் என்று சொல்ல கனி முடியாது என் அண்ணன பத்தி அப்படி சொல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள்.

அடுத்து அங்கு வரும் சண்முகம் கனியை கட்டிப்பிடித்துக் கொண்டு என் தங்கச்சியை விட்டு ரா என்று கேட்க அப்படின்னா என் அடித்தது நீ தன் என் துப்பாக்கி திருடியது நீ தானு ஒத்துக்க, ஒரு லெட்டர் எழுதி அதுல கையெழுத்து போட்டுக் கொடு உன் தங்கச்சியை விட்டு விடுகிறேன் என்று சொல்ல கனியை காப்பாற்றுவதற்காக சண்முகம் லெட்டர் எழுதி கையெழுத்து போட போக்க முப்பிடாதி தடுத்தும் சண்முகம் கையெழுத்து போட்டு கொடுக்கிறான்.

இதைத்தொடர்ந்து சண்முகத்தை ஜெயிலுக்குள் தள்ளி சிரிக்கும் முத்துப்பாண்டி நான் சொன்னா மாதிரியும் உன் தங்கச்சி விடுறதுக்கு நான் என்ன உன்ன மாதிரி நல்லவனா என்று பேச சண்முகம் என் தங்கச்சிக்காக தான் நான் கையெழுத்து போட்டு கொடுத்தேன் அவளை விட்டுடு என சொல்ல, அப்படியெல்லாம் விட முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான். உங்க ரெண்டு பேர் மேலயும் கேஸ் போடப் போவதாக சொல்ல சண்முகம் பயங்கர கடுப்பாக முத்துப்பாண்டி பயப்படாத எனக்கு தேவை நீதான் உன் தங்கச்சி விட்டுறேன் என்று சொல்கிறான்.

பிறகு பரணி ரத்னா ஆகியோர் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். சண்முகம் எந்த தப்பும் பண்ணல அவனை விட்டுடு என்று சொல்லி பரணி கேட்க எல்லாத்தையும் பண்ணது நான் தானே அவனே எழுதி கொடுத்திருக்கான் என்று லெட்டரை காட்டுகிறான். பரணிக்கும் முத்துப்பாண்டிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற பரணி ஒரு கட்டத்தில் அந்த லெட்டரை கொளுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment