விஜய் டிவி-யில் இருந்து கலர்ஸ் தமிழுக்கு வந்த நடிகை.. புத்தம்புது சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி!

by Column Editor

கடந்த சில மாதங்களாகவே, சீரியல் நடிகர்கள், தாங்கள் நடிக்கும் சீரியலை விட்டு விலகும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகிறது. சன் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களிலும் எதாவது ஒரு சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.

சமீப காலமாகவே சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. மேலும், அதில் வரும் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதிலும், இப்போது இன்ஸ்டா, ட்விட்டர் என பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் எப்போதும் ஒரு இணைப்பில் இருப்பதால், அவர்களின் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவி-யில் இருந்து வெளியேறிய நடிகை ரச்சித்தா தற்போது புதிய சீரியலில் களமிறங்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, சீரியல் நடிகர்கள், தாங்கள் நடிக்கும் சீரியலை விட்டு விலகும் சம்பவங்கள் பரவலாக நடந்து வருகிறது. சன் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களிலும் எதாவது ஒரு சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு சீரியலை விட்டு வெளியேறும் பிரபலங்கள் வேறொரு சேனல் சீரியலில் நடிக்க சென்று விடுகின்றனர். சிலர், வெள்ளித்திரை வாய்ப்புகளுக்காக சீரியலை விட்டு செல்கின்றனர். இன்னும் சிலர் எந்த ஒரு காரணமும் சொல்லாமல் விலகுவதும் உண்டு. அந்த வகையில், சமீபத்தில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ரச்சிதா அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாதங்களாகவே இவர் சீரியலை விட்டு விலக போகிறார் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், இவர் அதிரடியாக வெளியேறியது ஆச்சர்யத்தை தந்தது.

மேலும் இவர் நடிகரும், இயக்குனருமான குருப்ரசாத் நடிக்கும் கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த ரச்சிதா சீரியல் பக்கம் வரமாட்டார் என பேசப்பட்டது. ஆனால் தாம் இன்னும் தனது சீரியலில் இருப்பதை நடிகை உறுதியும் செய்தார். இவர் சில தொடர்களில் ஸ்பெஷல் என்ட்ரியும் கொடுத்துள்ளார். ஆனாலும், இவர் சீரியலை விட்டு விலகலாம் என்ற பேச்சு ஓயவில்லை. அதனை உறுதி செய்யும் விதமாக அவரே விலகியதும், அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில், தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.கலர்ஸ் தமிழில் மார்ச் 7ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த செய்தியை கேட்ட இவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்த தொடர் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ரச்சிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி -2 சீசன் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அந்த சீரியல் ஹிட்டானதால் சீசன்3, சீசன்4 என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்தார். சரவணன் மீனாட்சி ஹிட் சீரியலின் சீசன் வெற்றிக்கு பிறகு நடிகை ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவி-க்கு என்ட்ரி கொடுத்திருந்தார். தற்போது அதிலிருந்தும் விலகி கலர் தமிழ் தொலைக்காட்சி சீரியலில் என்ட்ரியாகியுள்ளார்.

Related Posts

Leave a Comment