மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஆன்மீக சுற்றுலா..

by Lifestyle Editor

நீங்கள் தென்னிந்தியாவில் உள்ள சிவன் கோவில்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஐஆர்சிடிசி ஒரு அற்புதமான சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் சிவ பக்தர்கள் தென்னிந்தியாவின் வழிபாட்டுத் தலங்களை தரிசிக்க முடியும். எவ்வளவு செலவாகும் என்று பார்ப்போம். இந்த ஆண்டு, நாடு முழுவதும் மகா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு சிவ பக்தர்களுக்காக ஐஆர்சிடிசி சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 38 ஆயிரத்தில் நீங்கள் மும்பையிலிருந்து தென்னிந்தியாவிற்கு பயணிக்கலாம். இந்த டூர் பேக்கேஜின் பெயர் தென்னிந்தியா- மகாசிவராத்திரி ஸ்பெஷல் (WMA47A). இந்த சுற்றுலா தொகுப்பு மார்ச் 7 முதல் மார்ச் 12 வரை இருக்கும். தென்னிந்திய சுற்றுப்பயணத்தை ஐஆர்சிடிசி மண்டல அலுவலகம் மும்பை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் மதுரை – ராமேஸ்வரம் – கன்னியாகுமரி – திருவனந்தபுரம் வரை பயணிக்கலாம். இங்கே நீங்கள் தென்னிந்தியாவின் புனித ஸ்தலங்களுக்கு செல்லலாம். இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோவளம் போன்ற இடங்களுக்குச் செல்லலாம். மேலும் இந்த டூர் பேக்கேஜில் ஹோட்டல் வசதிகள், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவற்றை நீங்கள் பெறலாம்.

ஐஆர்சிடிசி இன் இந்த டூர் பேக்கேஜில் நீங்கள் தனியாகப் பயணம் செய்தால் 51,100. தம்பதிகள் செல்வதாக இருந்தால், ஒரு நபருக்கு பயணச் செலவு ரூ.39,600, மூன்று பேர் இருந்தால், ஒரு நபருக்கு ரூ.38,000 செலுத்த வேண்டும். 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் படுக்கையுடன் ரூ 33600 மற்றும் படுக்கை இல்லாமல் ரூ 29300 செலவிட வேண்டும்.

இந்த டூர் பேக்கேஜுக்கு நீங்கள் ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்க வேண்டும். அதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இது தவிர ஐஆர்சிடிசி சுற்றுலா வசதி மையம், அலுவலகத்திலும் முன்பதிவு செய்யலாம்.

Related Posts

Leave a Comment