கல்யாணத்தை நிறுத்த வரும் ஷண்முகத்துக்கு மணமேடையில் காத்திருக்கும் அதிர்ச்சி

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி ரத்னா கழுத்தில் தாலி கட்ட சௌந்தரபாண்டி பிளானை சொல்ல அதை கவிதாவின் தாய் மாமா கேட்டு விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, எல்லாரிடமும் உண்மையை சொல்ல வந்த அவரை அடித்து சரக்கு ஊற்றி விட்டு ரூமுக்குள் அடைத்து வைக்கின்றனர்.

ஷண்முகம் மனசு என்னமோ படபடன்னு இருக்குனு தூக்கம் வராமல் உலாத்தி கொண்டிருக்க பரணி இன்னும் 28 நாள் தான், அதுக்கு அப்புறம் நான் கிளம்பி போய்டுவேன் என சொல்ல ஷண்முகம் உன் முடிவில் மாற்றம் இல்லையா என கேட்க பரணி இல்லை என சொல்லி விடுகிறாள். பிறகு கவிதாவின் தாய் மாமாவுக்கு போதை தெளிய அவர் ஷண்முகத்திடம் உண்மையை சொல்ல வர கவிதாவின் அக்கா புருஷன் போதையில் இருக்கார, எதையாவது உளறிட்டு இருப்பாரு, நம்பாதீங்க என சொல்கிறார்.

மறுநாள் காலையில் ஷண்முகம் மண்டபத்திற்குள் நுழையும் போது பந்தக்கால் சாய்ந்து கிடப்பதை பார்க்க ஏதோ அபச குணமாக தோன்றுவது போல உணர்கிறான். முகூர்த்த நேரம் நெருங்க முத்துப்பாண்டி மணமேடை ஏற ஷண்முகம் நீ ரத்னா வாழ்க்கையில் பிரச்சனை பண்ணதுக்கு இந்நேரம் உன்னை கொன்னு இருக்கணும், இப்போ உனக்கு கல்யாணம் நடக்க போகுது, இனிமேலாவது நல்லபடியா இரு என சொல்கிறார்.

பிறகு கவிதாவின் தாய் மாமா உன்னை ஏமாத்த போறாங்க பா, உன் தங்கச்சியை காப்பாற்று என சொல்ல சூடாமணி உன் தங்கச்சியில் ஒருத்தி நம்மள விட்டு போக போறது மாதிரியே இருக்கு என சொன்னது நினைவிற்கு வருகிறது. ஷண்முகம் கல்யாணத்தை நிறுத்த ஓடி வர முத்துப்பாண்டி இசக்கி கழுத்தில் தாலி கட்டி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment