எலிமினேட் ஆன விசித்ரா.. வெளியில் வந்த பின்பும் இப்படியா..

by Lifestyle Editor

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று விசித்ரா வெளியேறி இருக்கிறார். பைனலுக்கு முந்தைய வாரம் என்பதால் வெளியே போகப்போவது யார் என்பது பற்றி ஒரு பெரிய குழப்பமே இருந்தது.

விசித்ரா சமீப காலமாக மாயா கேங்கில் ஐக்கியமாகி இருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே பூர்ணிமாவும் பணப்பெட்டி உடன் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது மாயா கேங் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சீசனில் டாம் அண்ட் ஜெரி போல சண்டை போட்டுக்கொண்டிருந்த தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய இருவரை இன்றைய எபிசோடில் கமல் சமரசம் பேசி கைகொடுக்க வைத்தார். அதன்பின் தான் எலிமினேஷன் கார்டை காட்டி விசித்ராவை வெளியேற்றினார்.

வெளியில் வந்த பின்னும் இப்படியா :

விசித்ரா வெளியில் வந்து கமல் உடன் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் இருப்பவர்களுடன் பேசும் வாய்ப்பை கொடுத்தார்.

அப்போதும் தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை பார்த்து கமலே ஷாக் ஆகி ‘கையெல்லாம் குடுத்தீங்க… ஆனா எவிக்ட் ஆன பிறகும் தொடருது பாருங்க’ என விமர்சித்தார்.

மேலும் அர்ச்சனாவை குறிவைத்த விசித்ரா ‘உனக்குத்தான் சமைக்க தெரியும்னு சொன்னியே, இப்போ காமி. நெறைய வேலைகள் தெரியும்னு சொன்னியே, இப்போ ஒரு நாலு நாள் காமி’ என கூறினார்.

அர்ச்சனாவுக்கு அதிகம் ஆதரவு இருந்து வரும் நிலையில் அதை குறைக்கத்தான் விசித்ரா இப்படி எல்லாம் கமல் முன் பேசினாரா என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment