காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் கொல்லப்பட்டுள்ளனர் !

by Lifestyle Editor

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதால், கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்குக் கரையில், துல்கரேமில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த 24 மணி நேரத்தில் 382 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

11 வாரங்களுக்கும் மேலாக நடந்துவரும் மோதலில் குறைந்தது 20,915 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போர் தனது மக்களுக்கு எதிரான கடுமையான குற்றம் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார்.

இதேநேரம் ஹமாஸுடனான மோதல் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும் என்று இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று 100 க்கும் மேற்பட்ட தளங்களை தாக்கியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment