இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

by Column Editor

பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் நேற்று பங்குச்சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 50 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 980 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 22 புள்ளிகள் உயர்ந்து 19805 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும் புதிதாக முதலீடு செய்பவர்கள் மிகவும் கவனத்துடன் தகுந்த ஆலோசனை பெற்ற முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment