சென்செக்ஸ் 695 புள்ளிகள் வீழ்ச்சி ..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் 695 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதத்த உயர்த்தியது, அமெரிக்காவில் வங்கித்துறை மோசமடையும் என்ற அச்சம் போன்ற எதிர்மறையான சர்வதேச நிலவரங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டைட்டன் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,480 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,033 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 128 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.273.76 லட்சம் கோடியாக இருந்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 694.96 புள்ளிகள் குறைந்து 61,054.29 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 186.80 புள்ளிகள் சரிவு கண்டு 18,069.00 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment