சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்வு …

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. சென்செக்ஸ் 23 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. பின்னர் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் சிறிய உயர்வுடன் பங்கு வர்த்தகம் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி. மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக் மகிந்திரா மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,546 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,921 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 132 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.264.96 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.44 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 22.71 புள்ளிகள் உயர்ந்து 59,655.06 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 0.40 புள்ளிகள் சரிவு கண்டு 17,624.05 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment