சீதா முடிவால் மகா எடுத்த சபதம் … சீதா ராமன் சீரியல்

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சீதா ராமன். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோவிலுக்கு வந்த மகா & கோ ராம் மீதுள்ள ஷேரை முதலில் மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க மீராவும் சீதாவும் கோவிலுக்குள் நுழைகின்றனர்.

ஆனால் மகாலட்சுமியை சந்திக்காமல் கோவிலுக்குள் சென்று அர்ச்சனை செய்ய மீரா அவளது பெயர், ராசி, நட்சத்திரத்தை சொல்ல அப்போது சத்யா அங்கு வந்து அவனது ராசி, நட்சத்திரத்தை சொல்ல மீரா இதெல்லாம் உன்னுடைய திட்டமா என சீதாவிடம் கோபமடைய அவள் உங்களையும் சத்யாவையும் சேர்த்து வைப்பது எனது பொறுப்பு என சொல்கிறாள்.

மறுபக்கம் சேது இந்த ஷேர் விஷயங்களை எல்லாம் இங்கே பேச வேண்டாம் ஆபிஸில் வைத்து பேசலாம் என சொல்லி அனைவரையும் அழைத்து கொண்டு செல்கிறார்.

அதன் தொடர்ச்சியாக கோவிலுக்குள் சத்யாவும் மீராவும் பேசும் போது மீரா நீங்க வந்து வீட்ல பேச வேண்டியது தானே என சொல்ல சத்யா மகா என் மேல இருக்க கோவத்துல தானே உன்னை கட்டிக் கொடுக்கல என இதுவரை நடந்த விஷயங்களை பேசுகின்றனர்.

அதன் பிறகு சீதா வீட்ல இருக்க எல்லாருடைய ஆசிர்வாதத்துடன் உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என சொல்லி கொண்டிருக்க இந்த சமயம் அங்கு வரும் மகா இதை கேட்டு விடுகிறாள். பிறகு சேதுவிடம் மீரா மீது இருக்கும் ஷேரையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறாள்.

அடுத்து வீட்டுக்கு வந்த மகா அப்செட்டில் இருக்க அர்ச்சனா சீதாவும் மீராவும் வீட்டுக்கு வந்ததும் எங்க போய்ட்டு வரீங்க என கேட்க சீதா அவளை கலாய்த்து விட்டு உள்ளே போக அர்ச்சனா மகாவிடம் இது பற்றி சொல்ல போக மகா கோவிலில் நடந்த விஷயங்களை சொல்கிறாள்.

மேலும் சீதாவை இந்த வீட்ல வச்சுக்கிட்டே அவ அக்கா மதுவை ராம்க்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என முடிவெடுக்கிறாள்.

Related Posts

Leave a Comment