சென்செக்ஸ் 38 புள்ளிகள் உயர்ந்தது ..

by Lifestyle Editor

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,912 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,577 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 120 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.265.93 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.27 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 38.23 புள்ளிகள் உயர்ந்து 60,431.00 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 15.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,828.00 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment