2.2 கோடி பார்வையாளர்களை ஈர்த்து ஜியோ சினிமா புதிய சாதனை .. சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளின் ஆட்டம்

by Lifestyle Editor

2023 ஐபிஎல் தொடரின் மிக திரில்லிங்கான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.

டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் அதிகபட்ச பார்வையாளர்கள் எண்ணிக்கை 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியாகும். இதை 1.86 கோடி பேர் ஸ்ட்ரீமிங் தளத்தில் பார்த்துள்ளனர். இந்த சாதனையை நேற்றைய போட்டியில் முறியடித்து 2.2 கோடி பார்வையாளர்கள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஜியோசினிமா இலவச ஸ்ட்ரீமிங் மூலம் 2023 ஐபிஎல் முதல் வாரத்தில் அகில இந்திய அளவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 375 கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது. முதல் வார இறுதி நாள்களில் மட்டும் 147 கோடி பேர் போட்டிகளை ஜியோசினிமாவில் பார்த்துள்ளனர்.

Related Posts

Leave a Comment